×

சென்னை மண்ணடியில் தங்க கடத்தல் தொடர்பான பிரச்சனையில் 3 பேரை அடித்து துன்புறுத்திய 5 பேர் கைது..!!

சென்னை: சென்னை மண்ணடியில் தங்க கடத்தல் தொடர்பான பிரச்சனையில் 3 பேரை அடித்து துன்புறுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முகமது ஹக்கிம் என்பவருக்காக 9 ஐ போன்கள், 25 கிராம் தங்கத்தை துபாயில் இருந்து 3 பேர் எடுத்து வந்துள்ளனர். கோவா விமான நிலையம் வந்த 3 பேரிடம் வரியை செலுத்திவிட்டு பொருட்களை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். வரி செலுத்திய ரசீதை காண்பித்து பணம் கேட்டபோது சம்பந்தப்பட்ட 5 பேரும் நம்ப மறுத்து 3 பேரையும் தாக்கியுள்ளனர். 3 பேர் அளித்த புகாரில் முகமது ஹக்கிம், ஷேக் அப்துல்லா, பஷீர் அகமது உட்பட 5 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை மண்ணடியில் தங்க கடத்தல் தொடர்பான பிரச்சனையில் 3 பேரை அடித்து துன்புறுத்திய 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Manadi, Chennai ,Chennai ,Chennai Mannadi ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...